வணக்கத்துக்குரிய பிரமாணர்களே யாக்ஞவல்கியரிடம் நான் இரண்டு கேள்வியை கேட்கப்-போகிறேன். அவர் பதில் சொல்லிவிட்டால், யாராலும் அவரை வெல்ல முடியாது. அந்த பிராமணர்கள் அனுமதி அளித்தார்கள்.
ஸ்லோகம்-2
கார்கி, யாக்ஞவல்கியரை பார்த்து, “நான் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன். காசி, விதேஹ நாட்டை சேர்ந்த வீர்ர்கள் வில்லில் எடுத்து அதில் இரண்டு சக்தி வாய்ந்த இரண்டு வில்லை வைத்து பகைவர்களை பயந்தோட செய்வார்கள். அதேபோல இரண்டு கேள்விகளை உன்னிடம் கேட்கப் போகிறேன்” என்று கூறினாள். அவரும் நீ கேள் என்று கூறினார்.
சுவர்க்கத்திற்கும் மேலாகவும், பூமிக்கும் கீழேயும் எது வியாபித்துள்ளதோ, இந்த இரண்டிற்கும் இடையேயும் வியாபித்துள்ளது (எல்லா உலகத்திலேயும் வியாபித்துள்ளதோ) முன்பும் இருந்து, இப்பொழுதும் இருந்து கொண்டு, என்றும் இருக்கப்போவதும் ரிஷிகள் அந்த சூத்ரத்தை இவ்வாறு சொல்கிறார்கள். இப்படிபட்ட தத்துவத்தை எது வியாபித்திருக்கிறது.
ஸ்லோகம்-4,5
ஆகாசம் (ஈஸ்வரன், அந்தர்யாமி) இந்த தத்துவத்தை வியாபித்திருக்கிறது. யாக்ஞவல்கியரின் சரியான பதிலுக்கு கார்கி நமஸ்கரித்து விட்டு என்னுடைய இரண்டாவது கேள்விக்கு தயாராக இருங்கள் என்று கூறினாள்.
ஸ்லோகம்-6, 7
எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் இருக்கும் தத்துவம் ஆகாசம் என்று கூறினீர்கள் இந்த ஆகாசத்தை எது வியாபித்திருக்கிறது?
ஸ்லோகம்-8
ஹே கார்கி, “அக்ஷரம்தான் (நிர்குண பிரம்மந்தான்) என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். பிறகு இந்த அக்ஷரத்தின் லக்ஷணத்தை நிஷேத முகமாக விளக்க ஆரம்பித்தார்.
ஞானத்தையடைந்த ரிஷிகள் அக்ஷரம்தான் ஆகாசத்தையும் வியாபித்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இது அஸ்தூலம்- மிகப்பெரியதுமில்லை; அநஹ – மிகச்சிறியதுமில்லை; அக்ரஸ்வம் – குட்டையுமல்ல; அதீர்கம் – உயரமானதுமில்லை. மேலும் இது ஒரு பொருளுமில்லை, இதற்கு அவயவங்களுமில்லை (நிர் அவயவம்), வர்ணமற்றது; எதனோடும் ஒட்டுவதுமில்லை (அஸ்தேகம்), குணமற்றது. இது நிழலுமல்ல, இருளுமல்ல, வாயு ஸ்வரூபமல்ல, பஞ்சபூதங்களின் ஸ்வரூபமுமல்ல, ஆகாச ஸ்வரூபமுமல்ல (அனாகாசம்), அஸங்கம் (எதனோடும் சம்பந்தமற்றது), இந்திரியங்களற்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அரஸம் – சுவையற்றது, சுவைக்கும் இந்திரியங்களற்றது;
தத்- அந்த பிரம்மன்,
இது அகர்த்தாவாகவும், அபோக்தாவாகவும் இருக்கிறது. இது எந்த செயலையும் செய்யாது, அதனால் எந்த பலனையும் அனுபவிக்காது. இது போக்யாவும் அல்ல. அனுபவிக்கப்படும் பொருளாகவும் இல்லை, அனுபவிப்பனாகவும் இல்லை. போக்தாவாக இருக்கும்வரை சம்சாரமும் இருக்கும்
அது கர்ம பலனை அனுபவிப்பதுமில்லை, கொடுப்பதுமில்லை. ஜீவன் கர்த்தாவாக இருக்கும் போது எந்தச் செயலையும் செய்யும் சுதந்திரம் இருப்பதனால், பாவ புண்ணியத்தை உற்பத்தி செய்து, குழப்பத்துடன் இருக்கின்றான். சுக-துக்கங்களில் சிக்கிக் கொண்டு துயரமடைகிறான்.
ஈஸ்வர ஸ்வரூபத்தை விளக்குகிறது இந்த மந்திரம்; பிரம்மமானது ஜகத்துக்கு உபாதன காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது. நிமித்தக் காரணம் சைதன்யமுடையது, உபாதான காரணம் ஜடமாக இருப்பது. இந்த உலகத்திலுள்ள அனைத்தும் ஈஸ்வரனால் சீராக இயங்குகிறது. அக்ஷரம் என்ற தத்துவத்திடம் காரணம் என்ற தன்மையை ஏற்றி வைத்ததால் அது ஈஸ்வரனாகிறது.
இந்த ஈஸ்வரனுடைய ஆணையினால் (प्रशासने) சூரியனும், சந்திரனும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பூமியும், அந்த சுவர்க்க லோகமும் தத்தம் நிலையில் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. கிழக்கிலிருந்து பாயும் நதிகள், மலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகள் அனைத்தும் இறைவன் அருளால் ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கின்றன. எல்லா திசைகளிலிருந்து பாயும் நதிகள் அனைத்தும் அவனது ஆணையால் ஒடுகின்றன.
ஸ்லோகம்-12
கார்கி பிராமணர்களை பார்த்து, “மதிப்பிற்குரிய பிராமணர்களே யாக்ஞவல்கியர் சரியாக பதிலளித்து விட்டார், எனவே நமக்கு உகந்தது எதுவென்றால் அவர்க்கு நமஸ்காரம் செய்து விட்டு விலகிவிட வேண்டும். உங்களில் யாரும் இவரை வெற்றி கொள்ள முடியாது”, என்று கூறிவிட்டு அமைதியானாள்.
1. ஸாரீர புருஷ – ஹிரண்யகர்ப்பன் நம் சரீரத்தில் வெளிப்படுதல், நான்கு தத்துவங்களை சேர்த்து பார்த்தல்
ஸ்லோகம்-18 லிருந்து 24 வரை சாரம் மட்டும்
ஸ்லோகம்-25
மனதிற்கு ஆதாரம் என்ன? அது இருக்கும் இடம் ஸ்தூல சரீரம். மனம், சரீரம், பிராணன் ஒன்றையொன்றை சார்ந்திருக்கிறது. மனம் உடலில் இல்லையென்றால் சரீரம் ஜடமாகி விடும், நாய்களுக்கும், பறவைகளுக்கும் உணவாகிவிடும். மனதை இந்த உலகை அனுபவிக்க வேண்டுமானால், இந்த தேடல் தேவைப்படுகிறது. பிராணன் செயல்பட உடலிருக்க வேண்டும்.
க்ருஹ்யம் – கிரகிக்கப்படுவது; அக்ருஹ்யதே – கிரகிக்கபடாதது,
பிரம்மனுடைய இருப்பை அறிவது எவ்வாறு?
ஸ்லோகம்-27
யாக்ஞவல்கியர் அங்குள்ள பிராமணர்களை பார்த்து, “உங்களில் யாராவது கேள்வி கேட்க வேண்டுமென்றால் கேட்கலாம்” என்று அழைத்தார். யாரும் முன்வராததால், தானே ஒரு கேள்வியைக் கேட்கிறார்.
ஸ்லோகம்-28
மரத்தையும், ஜீவனையும் ஒப்பிட்டு விவரிக்கிறார்.
சங்கரரின் விசாரம்:
ஆனந்தம் என்ற வார்த்தை இன்பத்தை அனுபவிக்கும் விஷயத்தைக் குறிப்பிடுகிறது. உபநிஷத்தில் பிரம்மத்தை ஆனந்த ஸ்வரூபமாக கூறப்படுகிறது. பிரம்மத்தின் லக்ஷணமாக இந்த ஆனந்தம் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த பிரம்மானந்தமானது:
கேள்வி பிரம்மனிடம் இருக்கும் ஆனந்தம் அனுபவிக்க முடியும். ஞானி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறான்.
- கர்ம, கர்த்திரு விரோதம் – அனுபவிப்பவனும்,
அனுபவிக்கப்படும் பொருளும் ஒன்றாக இருக்க முடியாது. எனவே பிரம்மம் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
- அக்ஞானியும் பிரம்மானந்தத்தை அனுபவிக்க முடியாது ஏனென்றால் அவன்
பிரம்மத்தையே அறியவில்லை,
அடையவில்லை
- ஞானி பிரம்மானந்தத்தை அனுபவிக்கிறான். முக்தன் பிரம்மத்திற்கு வேறுபடாதவன் என்றால் அவனால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது எனெனில் இவனே பிரம்மனாக இருத்தலால். அவன் வேறுபட்டவன் என்றால் பிரம்மத்தை அடையவில்லை, அறியவில்லை என்றாகி விடும்.
பிரம்மத்தைப் பற்றிய ஞானத்தை நாம் அடைகின்றோம். பிரம்மம் நம்மிடத்திலே இருக்கிறது. எனவே இதை அடைந்தால் பிரம்மமாகவே ஆகிவிடுவோம். பிரம்மத்தை அறிவதால் நமக்கு மனநிறைவும், சுகமும், இன்பமும் கொடுக்கிறது. அது அனுபவத்திற்கு வருகிறது.
மிருத்யுவுக்கு ம்ருத்யு இருக்கிறதா என்றால் இருக்கிறது அதுதான் ஆத்மஞானம். நெருப்பு மிருத்யு என்றால் அதை அணைக்கும் நீர் அதனுடைய ம்ருத்யு. ஞானியின் இறப்பிற்கு பின் என்ன நிலையை அடைகின்றான். ஸ்தூல, சூட்சும சரீரங்கள் அந்தந்த ஸ்தூல,சூட்சும சரீரங்களுடன் கலந்து விடுகிறது. ஆனால் அவரது பெயர் மட்டும் பலகாலம் நிலைத்து இருக்கும். அக்ஞானி இறந்த பின் தேவதைகளுடன் ஒடுங்கி மீண்டும் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பு அவன் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் நிச்சயிக்கப்படுகிறது.
பகுதி-4
பாண்டித்யம் – சிரவணத்தை முழுமையாக முடித்து விட்டு ஞான பலத்துடன் இருக்க வேண்டும். குழந்தையைப் போல் இருக்க வேண்டும். தன்னைப்பற்றிய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதிருக்க வேண்டும். ஆத்ம ஞானத்தை மனனம் என்ற சாதனத்தின் துணைக் கொண்டு அடைந்த ஞானத்தை நிலை நிறுத்த வேண்டும். பிறகு நிதித்யாஸத்தின் மூலம் ஞான நிஷ்டை அடைய வேண்டும், அப்போதுதான் பிரம்மனாகிறான். ஜீவன் முக்தன் எப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது, அவன் எப்படியிருக்கிறானோ அதுதன் அவனுடைய லட்சணம். இது நிதித்யாஸனத்திற்கு உதவியாக இருக்கும்
பகுதி-6 :அனைத்துக்கும் சத்யமாக இருப்பது, அதி சூட்சுமமாக இருப்பது
பகுதி-7 : அந்தர்யாமி பிராமனத்தில் விராட்டுக்கு ஆந்தரமாக
இருப்பது,
ஹிரண்யகர்ப்ப தத்துவம். எல்லா தேவதைகளும், பூதங்களும்
நம் உடலில் உள்ள சூட்சும சரீரத்தை குறிக்கிறது
பகுதி-8 அக்ஷர பிரமானம்: அந்தர்யாமிக்கும்
ஆதாரமாக இருப்பது ஆகாசம்-ஈஸ்வரன். அக்ஷர ஸ்வரூபத்தை, அனாத்மாக்கள் அனைத்தையும் நீக்கி விளக்கப்படுகிறது
பகுதி-9 ஹிரண்யகர்ப்ப உபாஸனைகள், மகிமைகள் விளக்கப்பட்டது. மரத்தையும், மனிதனையும் ஒப்பிட்டு சில கருத்துக்கள் சொல்லப்பட்டது. பிரம்மானந்தத்தின் பலனை அனுபவிக்கிறோம்; ஸ்வரூபானந்தம் அனுபவிக்க முடியாது காரணம் அதுவாக அவன் இருப்பதால்.
----0000----
No comments:
Post a Comment